உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதியதில் பலியான மூதாட்டியின் உடல் மூடி வைக்கப்பட்டுள்ள காட்சி.

வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2023-07-19 09:33 GMT   |   Update On 2023-07-19 09:33 GMT
  • வாகனம் மோதியதில் பழனியம்மாள் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
  • இந்த விபத்து தொடர்பாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஜாகிரி பிரிவு ரோடு அருகே இன்று காலை 8 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது75) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பழனியம்மாள் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News