உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு

Published On 2023-06-09 09:45 GMT   |   Update On 2023-06-09 09:45 GMT
  • கீரனஅள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • மருத்துவமனையில சிகிச்சை பலனின்றி கெம்பம்மா உயிரிழந்தார்.

தருமபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்தள்ள அஞ்சலகிரி பகுதியை சேர்ந்தவர் கெம்பம்மா (வயது80). இவர் கீரனஅள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கெம்பம்மா உயிரிழந்தார்.

இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News