உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-08-13 09:07 GMT   |   Update On 2022-08-13 09:07 GMT
  • கேரளா மாநிலம் மூணாறில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.
  • இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

குற்றாலம் அருகே உள்ள பாட்டபத்து பாரதி வீதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 64).

இவர் கேரளா மாநிலம் மூணாறில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த அவர் மனவேதனை அடைந்தார்.

இதனால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News