உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2022-11-05 08:54 GMT   |   Update On 2022-11-05 08:54 GMT
  • சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன் பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்
  • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 62). இவர் தனது வீட்டில் எரியாமல் இருந்த பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது உடலில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்ட ர்கள் தெரிவித்துவிட்டனர்.

Tags:    

Similar News