உள்ளூர் செய்திகள்
சேலத்தில் வாகனம் மோதி முதியவர் பலி
- மணிப்பால் செல்லும் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
சேலம்:
சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு டைட்டில் பார்க் எதிரில் மாமாங்கத்தில் இருந்து மணிப்பால் செல்லும் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜாகிர் அம்மாபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியானவர் உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.