உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அளவுக்கு அதிகமாக மதுகுடித்த முதியவர் சாவு

Published On 2023-08-08 12:24 IST   |   Update On 2023-08-08 12:24:00 IST
  • குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
  • சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

வருசநாடு:

மதுரை மாவட்டம் சேடபட்டி குப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த மொக்கையன்(69). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த சில வருடங்களாக தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள டி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதி க்கப்பட்டது.

சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த மொக்கையனை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News