உள்ளூர் செய்திகள்

கோவை ரெயில் நிலையத்தில் முதியவர் சுருண்டு விழுந்து பலி

Published On 2022-10-30 09:04 GMT   |   Update On 2022-10-30 09:04 GMT
  • ரெயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் இறந்தார்.
  • கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

கோவை,

கோவை ரெயில் நிலையத்தில் எப்போதும் போன்று பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது 5-வது பிளாட்பாரத்தில் 60 வயது முதியவர் ஒருவர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை பீளமேடு அருகே உள்ள நாரயணசாமிலே அவுட் பகுதியில் சம்பவத்தன்று இரவு தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த ஆணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் காவி வேஷ்டி அணிந்து இருந்தார்.

மேலும் இடது கையில் எம்.என். என்று ஆங்கில எழுத்தில் பச்சை குத்தியிருந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எந்த ஊரை சேர்ந்தவர், யார் அவர்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News