உள்ளூர் செய்திகள்

கார் மோதி முதியவர் சாவு

Published On 2022-08-04 09:59 GMT   |   Update On 2022-08-04 09:59 GMT
  • வேன் எதிர்பாராத விதமாக மாரியப்பன் மீது மோதியது.
  • அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொண்டலாம்பட்டி:

சேலம் இரும்பாலை அருகே உள்ள கொல்லப்–பட்டி அடுத்த கீழ் வட்ட–முத்தம்–பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). இவர் நேற்று மாலை தாரமங்கலத்தில் இருந்து சேலம் சாலையில் கொல்லப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டி–ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக மாரியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News