என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thrown away"
- மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர்.
- பின்னால் அமர்ந்து சென்ற ஹரி பிரசாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (வயது 16).
இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பேருந்து நிலையம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர்.
அப்பொழுது வேகத் தடையில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி லாரி பின்னால் மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற ஹரி பிரசாத் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மாணவர் ஹரி பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய உள்ளது.
- வேன் எதிர்பாராத விதமாக மாரியப்பன் மீது மோதியது.
- அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் இரும்பாலை அருகே உள்ள கொல்லப்–பட்டி அடுத்த கீழ் வட்ட–முத்தம்–பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). இவர் நேற்று மாலை தாரமங்கலத்தில் இருந்து சேலம் சாலையில் கொல்லப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டி–ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக மாரியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்