உள்ளூர் செய்திகள்
தேனி புதிய பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்
- தேனி புதிய பஸ்நிலையம் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி புதிய பஸ்நிலையம் மூணாறு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார்.
அவர் நீலம் மற்றும் வெள்ளை கட்டம் போட்ட சட்டை மற்றும் கைலி அணிந்திருந்தார். இது குறித்து தேனி வி.ஏ.ஓ. கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்?
எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.