உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த முதியவர் கைது

Published On 2023-02-05 14:25 IST   |   Update On 2023-02-05 14:25:00 IST
  • மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது.
  • இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.

சேலம்:

சேலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது.

இதனால் சுப்பிரமணி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.

இதில் அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவார் சுப்பிரமணியனை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி பெண்ணை முதியவர் கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News