உள்ளூர் செய்திகள்
தொழிலாளியை கட்டையால் தாக்கிய முதியவர் கைது
- சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டது
- இதில் மணி ராஜாவை கட்டையால் தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள நோரல குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது39). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் மணி (57). கூலி தொழிலாளி.
இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டது. இதில் மணி ராஜாவை கட்டையால் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது.
இது குறித்து பர்கூர் போலீசார் மணியை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.