உள்ளூர் செய்திகள்

விவசாயியை தாக்கிய முதியவர் கைது

Published On 2023-04-08 15:42 IST   |   Update On 2023-04-08 15:42:00 IST
  • கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில், குமாரை சீனிவாசன் கல்லால் தாக்கினார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

ஊத்தங்கர

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா நொச்சிப்பட்டி அருகே உள்ள பெரியபூம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 53). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில், குமாரை சீனிவாசன் கல்லால் தாக்கினார்.

இதில் காயம் அடைந்தகுமார் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்து அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News