உள்ளூர் செய்திகள்

மயங்கி விழுந்து கிடந்த மூதாட்டி

Published On 2023-01-20 12:44 IST   |   Update On 2023-01-20 12:44:00 IST
  • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
  • மூதாட்டியை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த மூதாட்டி 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சேலம்:

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News