உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2023-02-03 09:10 GMT   |   Update On 2023-02-03 09:10 GMT
  • ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார்.
  • வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார்.

கடலூர்:

சிதம்பரம் அடுத்த நாஞ்சவயல் சத்யா நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார். வயது முதிர்வு காரணமாக வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார். அங்கு சென்றவர்கள் இவரது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்

. சம்பவ இடத்திற்கு வந்த இவரது மருமகள் பாரதி சிதம்பரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News