உள்ளூர் செய்திகள்

அரிசியின் தரம் குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

பாபநாசம் குடோனில் அதிகாரி ஆய்வு

Published On 2023-10-15 09:55 GMT   |   Update On 2023-10-15 09:55 GMT
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோன் பாபநாசத்தில் அமைந்துள்ளது.
  • குடோனில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பாபநாசம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோன் பாபநாசத்தில் அமைந்துள்ளது.

இந்த குடோனில் இருந்து பாபநாசம் தாலுகா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை கோதுமை, பாமாயில் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண் டார்.

அப்போது அரிசியின் தரம், இருப்பு நிலவரம் ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வட்டார குடோன் தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், முதுநிலை ஆய்வாளர் அஜித்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News