உள்ளூர் செய்திகள்

கார் மோதி நர்சரி கார்டன் உரிமையாளர் பலி

Published On 2023-07-25 15:21 IST   |   Update On 2023-07-25 15:21:00 IST
  • எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து க்குள்ளானது.
  • படுகாய மடைந்த தீபன் ரத்த வெள்ளத்தில் சம் பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தீபன் (வயது27). இவர் அதே பகுதியில் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபன் தனது மோட்டார் சைக்கிள் ஊத்தங்கரை-கிருஷ்ணகிரி சாலையில் ஜண்டமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில படுகாயமடைந்த தீபன் ரத்த வெள்ளத்தில் சம் பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News