உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நர்சு கைது

Published On 2023-10-10 09:48 GMT   |   Update On 2023-10-10 09:48 GMT
  • நர்சு பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
  • மோசடி நர்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மேற்கு ஆேராக்கியமாதா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது55). இவர் தனது மகனுக்கு அரசு வேலை வேண்டி முயற்சி செய்து வந்தார்.

அப்போது திண்டுக்கல் முத்தழகுபட்டி தெற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி மேரி (56) என்பவர் தனக்கு பல்வேறு அதிகாரிகளை தெரியும் என்றும், தன்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் என்றும் ஆரோக்கியதாசிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பி அவர் ரூ.3 லட்சம் வரை சாந்திமேரியிடம் கொடுத்துள்ளார்.

இதேபோல் பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆரோக்கியதாஸ் அறியவே தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் சாந்திமேரி ஏமாற்றி வந்துள்ளார்.

எனவே ஆரோக்கிய தாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி.உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ்செல்வி, ராஜகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சாந்திமேரி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது உறுதியானது.

இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் அவரை கைதுசெய்தனர். சாந்திமேரி ஒட்டன்சத்திரம் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News