உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

Published On 2022-10-31 10:17 GMT   |   Update On 2022-10-31 10:17 GMT
  • வருகிற 3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.
  • வருகிற 12-ந் தேதி வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

வருகிற 2-ந் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது.

3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் , ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் சதய விழா நாளான 3-ந் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News