உள்ளூர் செய்திகள்

பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2023-01-13 07:00 GMT   |   Update On 2023-01-13 07:00 GMT
  • விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
  • சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.

வெள்ளகோவில் :

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிகாலை நேரத்தில் எழுந்து கால்நடைகளை பராமரிப்பது, விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

காலை நேரங்களில் வாலி–பர் முதல் முதியோர் வரை நடைபயிற்சி மேற்கொள்வோர் நடைபயிற்சி மேற்–கொள்ள முடியாத சூழ்–நிலை ஏற்பட்டுள்ளது. காலை நேரங்களில் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்பவர்கள், வீதிகளில் காய்கறி கீரை விற்பனை செய்வோர் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலைகளில் வழக்கமான போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.

 இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகள் கருகி சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News