கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மரக்கன்றுகளை நடும் காட்சி.
- நோனி மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நோனி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தோட்டக்கலை க்ளப் சார்பில் நோனி மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நோனி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் தோட்டக்கலை இயக்குநர் பாலகிருஷ்ணன், நோனி தாவரத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்க உரையாற்றி வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் ஆரோக்கிய மேர் பர்னாந்து தோட்டக்கலை துறையின் அறிக்கையை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் மரக்கன்று நடுதலை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தரவடிவேல் மற்றும் கதிரேசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும் பேராசிரியர்கள் முத்துக்குமார், வசுமதி, கவிதா மற்றும் மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். தோட்டக்கலை பிரிவின் மற்றொரு நிகழ்வாக இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைப்பு செய்தனர். கல்லூரியில் உள்ள தோட்டத்தில் பனை விதை விதைப்பு விழா நடைபெற்றது.
விழாவில் இளையோர் செஞ்சிலுவை சங்க இயக்குநர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பனை விதை விதைப்பை தொடங்கி வைத்தார்.
தோட்டக்கலை பிரிவின் இயக்குநர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா, ராஜ்பினோ ஆகியோர் செய்திருந்தனர்.
கல்லூரியின் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை மற்றும் அலுவலர்கள் ஜெயராஜ், பாலமுருகன், ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேராசிரியர்கள் லிங்கதுரை நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் செய்திருந்தனர்.