உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி என்.எல்.சி. தொழிலாளி பலி

Published On 2023-09-22 09:11 GMT   |   Update On 2023-09-22 09:11 GMT
  • நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்
  • பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர்.

கடலூர்:

நெய்வேலி புதுநகர் 3-வது வட்டம்என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனிவேல் (வயது 55). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் முதலாவது சுரங்கம் 1 ஏ பிரிவில் வேலை பார்த்து வந்தார். நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். 2-வது வட்டம் மாணிக்கவாசகர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் இறந்தார். விபத்தில் பலியான பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Tags:    

Similar News