உள்ளூர் செய்திகள்

புதிய அங்காடி கட்டிடத்தை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

பால்பண்ணைச்சேரியில் புதிய அங்காடி கட்டிடம்

Published On 2023-10-04 09:46 GMT   |   Update On 2023-10-04 09:46 GMT
  • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது.
  • புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சி பால்பண்ணைச் சேரியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23 நிதியின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் அருட்செல்வன், நகரச் செயாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News