உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் திருமணமான 1 ஆண்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2022-11-09 07:10 GMT   |   Update On 2022-11-09 07:10 GMT
  • பண்ருட்டியில் திருமணமான 1 ஆண்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
  • கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் மருவன் தெரு வை சேர்ந்தவர்பாலசண்முகம். அவரது மகன் இளங்குமார் (34) என்பவர் பூதம்பாடியைச் சேர்ந்த ராஜேஸ்வரிஎன்பவரை திருமணம் செய்து ஓர் ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் 7ம் தேதி நெய்வேலியில் நடை பெற்ற தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இளங்குமார் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது ஃபேன் கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய் துகொண்டார் இதுபற்றி தாயார் இளவரசி முத்தாண்டி குப்பம் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

Tags:    

Similar News