உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கொரோனா புதிய பாதிப்பு 85-ஆக குறைந்தது

Published On 2022-07-10 09:29 GMT   |   Update On 2022-07-10 09:29 GMT
  • நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத இறுதி வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது
  • நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதியானது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத இறுதி வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

சமீப காலத்தில் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

மாநகர பகுதியில் 16 பேர், வள்ளியூரில் 14 பேர், அம்பையில் 12 பேர், பாளையில் 10 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் புதிதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News