உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்- எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டன.
- ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
இதனால் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் திருமருகல் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சுல்தான் ஆரிப், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன், ஊராட்சி செயலர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.