உள்ளூர் செய்திகள்
நெசப்பாக்கத்தில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு
நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா.
போரூர்:
நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, பிசியோதெரபிஸ்ட்.
இவர் நேற்று இரவு வீட்டின் அருகே சாலையில் நடந்தபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென கார்த்திக் ராஜாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.