உள்ளூர் செய்திகள்

நெல்லையில் அணி மாறிய ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்

Published On 2022-06-21 09:54 GMT   |   Update On 2022-06-21 09:54 GMT
  • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினையில் விஸ்வரூபம்.
  • நெல்லையின் அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

நெல்லை:

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைைம பிரச்சினையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்மாவட்டங்களிலும் ஏராளமானவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைபாட்டை எடுத்து வருகினறனர்.

தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி தனித்தனியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லை மாவட்டத்திலும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைபாட்ைட எடுத்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 52 பொதுக்குழு உறுப்பினர்களும், 9 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால் தற்போது 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள இன்று புறப்பட்டு சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் தற்போது முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 90 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News