உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து- மூதாட்டி பலி

Published On 2022-09-01 09:27 GMT   |   Update On 2022-09-01 09:27 GMT
  • தியாகராஜன் நேற்று தனது மனைவியுடன், புதுக்கோட்டை மாவட்டம், நெய்குப்பையிலிருந்து, (டி.ஹூண்டாய் காரில் புறப்ப ட்டார்.
  • மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர்:

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் நேற்று தனது மனைவியுடன், புதுக்கோட்டை மாவட்டம், நெய்குப்பையிலிருந்து, (டி.ஹூண்டாய் காரில் புறப்ப ட்டார். காரை சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த சண்முகம், ஓட்டினார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி பஸ் நிறுத்தம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், சென்னை, ஆழ்வா ர்பேட்டையைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி மீனாட்சி, (வயது 60) அதே இடத்தில் இறந்தார்.

மேலும், தியாகராஜன், அவரது வீட்டு சமைய ல்காரர் சென்னை ஆழ்வா ர்பேட்டை சேர்ந்த சேவ கன், கார் டிரைவர் சண்மு கம், ஆகியோர் காயம டைந்தனர். அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை சேர்க்க ப்பட்டு, மேல் சிகிச்சை க்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News