உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-12-29 09:00 GMT   |   Update On 2022-12-29 09:00 GMT
  • எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது களமருதூர் பகுதி ஒரத்தூர் காலனி சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

போலீசார் பார்த்தவுடன் அவர் ஓடத் தொடங்கினார். ஆனால், போலீசார் அவரை சிறிது தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்து கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதுபோல் தொடர்ந்து சம்பவங்களை ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளுந்தூர்பேட்டை டிஎஸ்.பி. மகேஷ் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News