உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மாணவன் பலி
- நேற்று மாலை பெரியசெவலையில் இருந்து கொரட்டூரில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான்.
- நீரில் மூழ்கி சம்பவ இடத்திலே இறந்தான்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியை சேர்ந்த சீனு விவசாயி. இவரது மகன் சிம்பு அதே பகுதியில் படித்து வருகிறான். இவர் நேற்று மாலை பெரியசெவலையில் இருந்து கொரட்டூரில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான். அப்போது நீரில் மூழ்கி சம்பவ இடத்திலே இறந்தான். இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.