உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே அண்ணன் கண்டித்ததால் தம்பி தற்கொலை

Published On 2022-07-16 08:42 GMT   |   Update On 2022-07-16 08:42 GMT
  • திருநாவலூர் அருகே அண்ணன் கண்டித்ததால் தம்பி தற்கொலை செய்துகொண்டார்.
  • அண்ணன் டேவிட் பிரசாத் மேற்படிப்பு படிக்குமாறு தம்பியை கண்டித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராபர்ட் ராஜ் சேகர் மகன் பிரவினவா.(வயது 17) பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார் சம்பவத்தன்று பிரவினவா அண்ணன் டேவிட் பிரசாத் வயது 21 மேற்படிப்பு படிக்குமாறு தம்பியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவினவா அதே ஊரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் சென்று வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவுக்கு அலி சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டார்

Tags:    

Similar News