உள்ளூர் செய்திகள்

அருண்

திண்டிவனம் அருகேமாயமான வாலிபர் காயங்களுடன்ஏரிக்கரையில் பிணமாக மீட்புகொலையா? போலீசார் விசாரணை

Published On 2023-11-14 09:59 GMT   |   Update On 2023-11-14 09:59 GMT
  • திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்
  • வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (24)ஸ்வீட் மாஸ்டர் . இவர் கடந்த மாதம் 30 -ந்தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போது செல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததது. இதனால் அவரது தந்தை அருண் வேலை செய்த இடம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அவரை காணவில்லை என அவரது தந்தை மோசஸ் வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 30 -ந்தேதி இரவு புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் ஏரிக்கரை வேப்ப மரத்தில் அழுகிய நிலையில் உடலில் பல்வேறு இடங்களில்ெவடடு காயங்களுடன் அருண் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற ரோசனை போலீசார் அருண் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருண் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது முன் விரோதம் காரணமாக யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News