உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே:மணல் திருடிய மாட்டு வண்டி பறிமுதல்

Published On 2023-11-16 13:03 IST   |   Update On 2023-11-16 13:03:00 IST

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் அள்ளிச் செல்வதாக ராமநத்தம் போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து ராம நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் பெண்ணங்கோனம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கொளஞ்சிவேல் (வயது 50) என்பவரையும், அவரது மாட்டு வண்டியையும் மடக்கிப் பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News