உள்ளூர் செய்திகள்

சிங்காரபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தியவர் சிக்கினார்

Published On 2022-09-22 15:31 IST   |   Update On 2022-09-22 15:31:00 IST
  • அந்த வழியாக வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
  • கைதான அவரிடம் இருந்து 5 லிட்டம் சாராயம் பறிமுதல் செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மகனூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது83). இவர் விசுவாசம்பட்டி பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 5 லிட்டம் சாராயம் பறிமுதல் செய்தனர்.

கைதான அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News