சிங்காரப்பேட்டை அருகே குடும்ப தகராறில் மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
- தமிழ்செல்வி பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
- ஒரு கிணற்றில் தமிழ்செல்வி பிணமாக மிதப்பது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மகனூர் கட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 26).
இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்செல்வி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் தமிழ்செல்வி பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தமிழ்செல்வி பிணமாக மிதப்பது தெரியவந்தது.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்செல்வி குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.