உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை

Published On 2022-08-27 08:07 GMT   |   Update On 2022-08-27 08:07 GMT
  • மர்ம நபர்கள் வீட்டு கதவு பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.
  • வீடு திரும்பிய திருமலை தனது வீட்டில் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை தொழிலாளி. சம்பவத்தன்று, திருமலை குடு்ம்பத்தோடு வெளியூர் சென்று இருந்தார்,

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டு கதவு பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.

வீடு திரும்பிய திருமலை தனது வீட்டில் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருமலை சங்கராபுரம்போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தன்னுடன் சித்தாளாக வேலை பார்த்து வரும் வேப்பூர் சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி அமராவதி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News