உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
- குடிபோதையில் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
- சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வீரன்(46). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காலை குடிபோதையில் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த வீரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.