உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
- விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
- நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தொழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் விஜி (27). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு உள்ள கிணற்றில் விஜி தவறி விழுந்தார். நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.