உள்ளூர் செய்திகள்

சந்தூர் அருகே புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதி கார்பெண்டர் சாவு

Published On 2022-11-09 14:59 IST   |   Update On 2022-11-09 14:59:00 IST
  • புளியமரத்தில் எதிர்பாரா தவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.
  • தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் பசுபதி (வயது28). கார்பெண்டரான இவருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகியுள்ளது.

இந்த நிலையில் இவர் நேற்று மாலை சந்தூர் அடுத்துள்ள மகாதேவகொல்லஅள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையோர புளியமரத்தில் எதிர்பாரா தவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தை அந்த வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News