சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கணவன்-மனைவி உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி
- கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 3 பெண்கள் உள்பட 4 பேர் திடீரென வந்தனர்.
- கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 3 பெண்கள் உள்பட 4 பேர் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் மணக்காடு பகுதியை சேர்ந்த திருப்பதி அவரது மனைவி ஆண்டனி, இவர்களது மகள்கள் மகாலெட்சுமி, தமிழ்செல்வி என்பது தெரிய வந்தது . அப்போது திருப்பதி கூறியதாவது, எனது மகனை போலீசார் நேற்றிரவு விட்டிற்கு வந்து அைழத்து சென்றனர். ஆனால் அவர் தற்போது வரை எங்கு உள்ளார் என்று தெரியவில்லை இதனால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறுகையில, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வினோத் என்பவர் கொலை வழக்கு தொடர்பாக அவரை விசாரிக்க அழைத்து சென்றதாக கூறினர்.