உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2022-09-01 15:05 IST   |   Update On 2022-09-01 15:05:00 IST
  • வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பிரியாவை பாம்பு கடித்து விட்டது.
  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மீல் காலனி பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் பிரியா (வயது 24).

இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.

வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பிரியாவை பாம்பு கடித்து விட்டது. அவரை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சித்ரா தந்த புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News