உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் கடத்தியவர் கைது

Published On 2023-10-16 07:27 GMT   |   Update On 2023-10-16 08:34 GMT
  • இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்
  • அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபா கரன் தலைமையிலான போலீசார் அத்தி யூரில் வாகன சோதனை யில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவரிடம் போலீ சார் நடத்திய விசாரணையில், அவர் புதுப்பட்டு கிரா மத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 47) என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் மூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News