மத்தூர் அருகே சேலையில் தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நீலா சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் நீலா தற்கொலை செய்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கோலனூர் அடுத்துள்ள சோலான் குட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.
இவர் சென்னை பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நீலா (வயது22). இவர்களுக்கு வர்ஷினி (3), மோனிக் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நீலா சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த நீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் நீலா தற்கொலை செய்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.