உள்ளூர் செய்திகள்

குருபரப்பள்ளி அருகே தொழிலாளி தூக்கில் தொங்கி தற்கொலை

Published On 2022-10-11 14:49 IST   |   Update On 2022-10-11 14:49:00 IST
  • குடும்பத்திலும் சில பிரச்சினைகள் இருந்துள்ளன.
  • மனம் உடைந்த ரத்னகுமார் சம்பவத்தன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.திப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் ரத்னகுமார் (வயது 19). கூலி தொழிலாளியான ரத்னகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்திலும் சில பிரச்சினைகள் இருந்துள்ளன. இதில் மனம் உடைந்த ரத்னகுமார் சம்பவத்தன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அவரது தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News