உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

Published On 2023-04-22 15:50 IST   |   Update On 2023-04-22 15:50:00 IST
  • தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமத்தியாவரபுரம் முல்லை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் கனி ஸ்ரீ என்கிற 1 அரை வயது குழந்தை.

இந்த குழந்தை வீட்டில் விளை யாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News