உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே புகையிலை பொருள்கள் வைத்திருந்தவர் கைது

Published On 2022-08-25 15:21 IST   |   Update On 2022-08-25 15:21:00 IST
  • நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
  • சீனிவாசன் ( வயது 40 ) என்ற அந்த ஆசாமியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5,500 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் டவுன் போலீசார் பஸ் நிலைய பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டம் பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் ( வயது 40 ) என்ற அந்த ஆசாமியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5,500 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News