உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே சூதாடிய 7 பேர் கைது
- பிடிபட்ட சிவா (வயது 31),பாபு(32),முரளி(31),கார்த்திகேயன்(31) ஆகிய 4 போரையும் கைது செய்தனர்.
- போலீசார் அவர்களிடமிருந்து ரூ.13,700 பணம், 3 மோட்டார்சைக்கிள்கள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் ஹட்கோ போலீசார் பெத்த கொள்ளு ஏரி பகுதி வழியாக ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கும்பல் சூதாடிக்கொண்டிருந்தது. போலீசாரை கண்டவுடன் அந்த கும்பல் தப்பி ஓடிஏ முயன்றது. இதில் 4 பேரை போலீசார் மடக்கினர். 3 பேர் ஓட்டம் பிடித்து விட்டனர்.
பிடிபட்ட சிவா (வயது 31),பாபு(32),முரளி(31),கார்த்திகேயன்(31) ஆகிய 4 போரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.13,700 பணம், 3 மோட்டார்சைக்கிள்கள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆனந்த்,சந்திரன், முனியப்பன் ஆகியோரை தேடி வருகின்றனர்.