உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவன் தற்கொலை

Published On 2022-07-08 09:05 GMT   |   Update On 2022-07-08 09:05 GMT
  • கடலூர் அருகே மனைவியுடன் தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
  • வாசுதேவன் தனது வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

கடலூர்:

கடலூர் அருகே பெத்த நாயக்கன் குப்பம் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வாசு தேவனுக்கும் வளர்மதிக்கும் தங்களது மகன் கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக குடும்ப சண்டை நடந்து ள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த வாசுதேவன் தனது வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

இதனை தொடர்ந்து வாசுதேவனை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வாசுதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News