உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே: மின்சாரத்துறை பெண் ஊழியர் மீது வழக்கு

Published On 2022-07-02 15:07 IST   |   Update On 2022-07-02 15:07:00 IST
  • கடலூர் அருகே மின்சாரத்துறை பெண் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார்.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 51). இவர் தமிழ்நாடு மின்சாரத் துறையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார். அவரிடம் பணம் இல்லாததால், மகாலட்சுமி தொடர்ந்து பணம் கேட்டதற்காக தன்னுடைய சம்பள வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாய் லோன் எடுத்து மகாலட்சுமிக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் கோடீஸ்வர ஆனந்த் பலமுறை மகாலட்சுமியிடம் தான் வழங்கிய 4 லட்சம் ரூபாய் பணத்தை வழங்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் மகாலட்சுமி பணம் தராமல் காலம் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோடீஸ்வர ஆனந்த் மீண்டும் பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது என மகாலட்சுமி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News